அண்மைய செய்திகள்

recent
-

நடுநிலமை,பாரபட்சமின்மை என மார்தட்டும் சமூக நல சங்கங்கள் இரட்டை வேடம் இடுவது ஏன்? செல்வராசா செல்வக்குமரன்(டிலான்)

மன்னார் மாவட்டத்தில் உள்ள சில அரச சார்பற்ற நிறுவனங்களில் அங்கம் வகிக்கும் அங்கத்தவர்கள் தேர்தல் காலங்களில்  வேட்பாளர்களின் பின் சென்று அரசியல் வேடமிடுவதுடன்  நடுநிலைமை,பாராபட்சமின்மை என்ற அடிப்படை விழுமியங்களை அழித்தொழிப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும்,வடமாகாண சபை தேர்தலின் மன்னார் மாவட்ட வேட்பாளருமான செல்வராசா செல்வக்குமரன்(டிலான்) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,,,

மன்னார் மாவட்டத்தில் இயங்கி வரும் சில பிரபல்யமான அரச சார்பற்ற மற்றும் சமூக அமைப்புகளான பிரஜைகள் குழு,மீனவ ஒத்துழைப்புப்பேரவை,இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் ஆகிய நிறுவனங்களின் அங்கத்தவர்கள் தாங்கள் சார்ந்த நிறுவனங்களின் அடிப்படை கொள்கைக்கு எதிராக செயற்படுவதுடன்,தமிழர் உணர்வு,தமிழ் தேசியம் என்று மக்களின்; உணர்வுகளை தட்டி விட்டு அரசியல் இலாபம் தேடும் சில அரசியல் வாதிகளுக்காக வாக்கு சேகரிக்கும் சில பணிகளை மிகத்துரிதமாகவும்,சாதுரியமாகவும்,செயற்பட்டு வருகின்றனர்.

இது வண்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

எனவே பொது நிலையினர் மற்றும் நடு நிலையான சங்கங்களின் அங்கத்தவர்கள் தங்கள் நடுநிலைமைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன்.என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


நடுநிலமை,பாரபட்சமின்மை என மார்தட்டும் சமூக நல சங்கங்கள் இரட்டை வேடம் இடுவது ஏன்? செல்வராசா செல்வக்குமரன்(டிலான்) Reviewed by Admin on August 31, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.