இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை தொடர்பான விடயங்களை சேகரிக்கவே நவநீதம்பிள்ளை வருகிறார்: சுமந்திரன் எம்.பி.
நவநீதம்பிள்ளையின் விஜயம் தொடர்பில் கருத்ததுத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை கட்டாயமாக நாங்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவோம். ஐக்கிய நாடு சபையின் மனித உரிமைப் பேரவையில் கடந்த மார்ச் மாதமும், 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதமும் இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன.
அந்தத் தீர்மானங்களில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காகவே ஆணையாளர் இம்மாதம் 25 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.
தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட போர்க்குற்ற விசாரணைகள், தடுப்புக் காவலில் இருக்கின்றவர்களுக்கு பொது மன்னிப்பு, காணாமற் போனவர்கள் தொடர்பான விசாரணைகள், நிரந்தர அரசியல் தீர்வு, நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் அமுல்படுத்தப்படல் போன்ற விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நவநீதம்பிள்ளையின் விஜயம் அமைந்திருக்கலாம்.
ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் இலங்கை அரசு நிறைவேற்றியுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதுடன், அவற்றை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசு வளங்களைக் கோரினால் அதனை நிவர்த்தி செய்யவும் ஐக்கிய நாடுகள் சபை முன்வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை தொடர்பான விடயங்களை சேகரிக்கவே நவநீதம்பிள்ளை வருகிறார்: சுமந்திரன் எம்.பி.
Reviewed by Admin
on
August 18, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment