இலங்கையில் இன்னமும் ஊடக சுதந்திரம் இல்லை; ஐ.நா.சபை குற்றச்சாட்டு
இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது அவசியமானது என்றும் ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீமூனின் பேச்சாளர் மார்ட்டீன் நென்கீயிடம், "இன்னர் சிற்றி பிரஸ்'' எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஊடக சுதந்திரம் தொடர்பில் பெரியளவில் சர்ச்சைகள் நிலவி வருகின்றன. ஊடக சுதந்திரம் மிகவும் அவசியமானது. அடக்குமுறைகள் எதுவுமின்றி சுதந்திரமான முறையில் தங்களின் கடமைகளை மேற்கொள்ள ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா செயலரின் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
இலங்கையில் இன்னமும் ஊடக சுதந்திரம் இல்லை; ஐ.நா.சபை குற்றச்சாட்டு
Reviewed by Admin
on
August 04, 2013
Rating:

No comments:
Post a Comment