அண்மைய செய்திகள்

recent
-

பக்றீரியா தொற்று இருக்குமானால் உற்பத்தி பொருட்களை மீளப்பெறுமாறு ‘பொன்டேரா’ முகவர்களுக்கு அறிவுறுத்தல்

நியூஸிலாந்தின் பாரிய பால் உற்பத்தி நிறுவனமான 'பொன்டேரா' உலகலாவிய தமது முகவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதன்படி தமது பால் உற்பத்திகளில் கலந்திருப்பதாக கூறப்படும் பக்றீயாக்கள், காலம் செல்லும் போது நச்சுத்தன்மையை அடையும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இது பல நோய்களுக்கு வித்திடக்கூடும் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

 எனவே பால்மாக்களில் பக்றீரியா தொடர்பான உண்மை பரிசோதனைகளின் போது தெரியவந்தால் உற்பத்திப் பொருட்களை மீளப்பெற்றுக் கொள்ளுமாறு பொன்டேரா தமது முகவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 பொன்டேராவுக்கு உலகளாவிய ரீதியில் இலங்கை உட்பட்ட 8 நாடுகளில் முகவர்கள் செயற்படுகின்றனர். இதேவேளை நியூஸிலாந்தின் வர்த்தக்கத்துறை அமைச்சர் டிம் குரோசர் பால் உற்பத்திகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் உட்பட்ட அதிகாரிகளுக்கு அவசர அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.


பக்றீரியா தொற்று இருக்குமானால் உற்பத்தி பொருட்களை மீளப்பெறுமாறு ‘பொன்டேரா’ முகவர்களுக்கு அறிவுறுத்தல் Reviewed by Admin on August 04, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.