யாழ்.மாவட்டத்தில் ஒருவார காலப்பகுதிக்குள் 144 போ் கைது
எதிர்வரும் மாதம் வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சந்கேத்திற்கு இடமான முறையில் நடமாடித்திரிந்த 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இன்று காலை யாழ்.காவல்துறை நிலையத்தில் நடைபெற்ற வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்படித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படித் புள்ளிவிபரங்கள் தொடர்பில் மேலும் தெரியவருவது. யாழ்.காவல்துறைப் பகுதியில் 71 பேரும், கே.கே.எஸ் காவல்துறைப் பகுதியில் 73 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் முன்னிலைப்டுத்தப்பட்டு அவர்களுக்கான தண்டனையும் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் ஒருவார காலப்பகுதிக்குள் 144 போ் கைது
Reviewed by Admin
on
August 23, 2013
Rating:
No comments:
Post a Comment