தலைமன்னார் கடலில் தொழிலுக்குச் சென்ற மீனவர் ஒருவரை காணவில்லை.
கடந்த வியாழக்கிழமை இரவு தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த ஜே.ஜெரிசா மடுத்தின் (வயது-30)மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான ஸ்டார்லின் ஜெராட்(வயது-39) ஆகிய இருவரும் கண்ணாடியிளைப்படகு ஒன்றில் கடற்தொழிலுக்குச் சென்றுள்ளனர்.
எனினும் இருவரும் மறு நாள் நேற்று வெள்ளிக்கிழமை காலை கரை திரும்பவில்லை. ஆனால் அவர்களுடைய படகு கரை ஒதுங்கியுள்ளது. இந்த நிலையில் தலைமன்னார் கடற்படையினர் கடலில் தேடுதலை மேற்கொண்ட போது ஜெரிசா மடுத்தின் என்பவர் மீட்கப்பட்டு உடனடியாக பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் 2 பிள்ளைகளின் தந்தையான ஸ்டார்லின் ஜெராட்(வயது-39) என்பவர் தொடர்பில் எவ்வித தகவலும் தெரியவில்லை.இந்த நிலையில் அவரது உறவினர்கள் நேற்று வெள்ளிக்கிழமை தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தலைமன்னார் கடலில் தொழிலுக்குச் சென்ற மீனவர் ஒருவரை காணவில்லை.
Reviewed by Admin
on
August 24, 2013
Rating:

No comments:
Post a Comment