அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக்கூட்டம்-ஓகஸ்ட்-27

வடமாகாண சபை தேர்தலுக்கான தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் எதிர் வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தலைமையில் இடம் பெறவுள்ளது.

இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தர், முன்னால் உயர் நீதிமன்ற நீதியரசரும்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளருமான எஸ்.வி.விக்னேஸ்வரன்,இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா,தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்,ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் செயலாளர் நாயகமும்,பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன்,மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான என்.சிறிகாந்தா,வீ.ஆனந்த சங்கரி,ரி.சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளனர்.

 இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுகின்ற 8 வேட்பாளர்களின் அறிமுகமும் இடம் பெறவுள்ளது.



மன்னாரில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக்கூட்டம்-ஓகஸ்ட்-27 Reviewed by Admin on August 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.