அண்மைய செய்திகள்

recent
-

பாஹியன்கல குகையில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடு 12 ஆயிரம் வருடங்கள் பழமையானது

களுத்துறை புலத்சிங்கள பாஹியன்கல குகையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடு 12 ஆயிரம் வருடங்கள் பழமையானதென்பது தெரியவந்துள்ளது.

 ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள கால நிர்ணய அறிக்கையில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஹியன்கல குகையில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்ட பழமை வாய்ந்த மனித எலும்புக்கூடு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஆய்வு கூடமொன்றில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தொல்பொருள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

 இந்த எலும்புக்கூட்டினை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை பிரித்தானியாவின் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 கடந்த ஜூன் மாதம் பாஹியன்கல குகையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த பழமையான எலும்புக்கூடு இலங்கையில் முதற்தடவையாக கண்டுபிடிக்கப்பட்ட ஆதி மனிதனின் முழுமையான எலு ம்புக்கூடு என கருதப்படுகின்றது.



பாஹியன்கல குகையில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடு 12 ஆயிரம் வருடங்கள் பழமையானது Reviewed by Admin on August 25, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.