அண்மைய செய்திகள்

recent
-

முசலி பிரதேச பிரஜைகள் குழுவினரால் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களிடம் மகஜர் கையளிப்பு

முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் மாதாந்த கலந்துரையாடல் அமைப்பாளர் சுனேஷ் அவர்களின் தலைமையில் காலை 10 மணியளவில் சவேரியார் புரத்தில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திரு அடைக்கலநாதன் மற்றும் வட மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான திரு குணசீலன் திரு டெனிஸ் ,திரு சிவகரன் மற்றும் நகர சபை உப தவிசாளர் ஜேம்ஸ் மற்றும் கிராம அமைப்புக்களின் 30 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இக் கூட்டத்தில் குறிப்பாக வருகை தந்த வேட்பாளர்கள் வட மாகான சபையினுடைய முக்கியத்துவம் பற்றியும் வட மாகான சபையை தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து ஆட்சியை அமைப்பதன் ஊடாக வட பகுதியை அபிவிருத்தி பாதையில் இட்டுச்செல்லலாம் என்றும் கூறப்பட்டது

பின்னர் வாக்குகளை எதிர்பார்த்து வருகின்ற வேட்பாளர்க சில முன்மொழிவுகள் வைக்கப்பட்டன
01.இடம் பெயர்ந்தவர்களுக்கான மீள குடியேற்றம்
02.கரையோர பகுதி மக்களின் காணிகளுக்கான உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுத்தல்
03.படித்த வாலிபர்களுக்கான வேலைவாய்ப்புக்கள்
04.மீனவர்களின் தொழில் கட்டுப்பாடுகளை நீக்குதல்
05.தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் இந்திய இழுவை ப்படகுகளை நிரந்தரமாக நிறுத்தி மீனவ தொழில் ஒன்றினை ஏற்படுத்தி கொடுத்தல்
06.யுத்தத்தால் கணவர் மற்றும் பிள்ளைகளை இழந்த பெண்களின் சிறந்த வாழ்வாதாரம்
07.கைவிடப்பட்ட குளங்கள் நீர்பாசனங்களை புனரமைத்தல்
08.இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகள் மற்றும் வாழ்விடங்கள் அனைத்தையும் அவர்களிடம் இருந்து உடனடியாக மக்களுக்கு பெற்றுகொடுதல்
09.பிரதேசங்களுக்கான நீர்ப்பாசனம்
10.மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல்
போன்ற விடயங்களை வேட்பாளர்களாக களம் இறங்கியவர்களுக்கு முசலி பிரதேச பிரஜைகள் குழு அமைப்பாளர் சுனேஷ் அவர்களினால் தெளிவு படுத்தி மகஜர் கையளிக்கப்பட்டது




முசலி பிரதேச பிரஜைகள் குழுவினரால் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களிடம் மகஜர் கையளிப்பு Reviewed by Admin on August 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.