அண்மைய செய்திகள்

recent
-

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

34 இந்திய மீனவர்களை எதிர்வரும் செப்டெம்பர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் உத்தரவிட்டுள்ளார்.

 இந்திய, காரைக்கால் மற்றும் நாகபட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், பருத்தித்துறை முனை கடற்பரப்பில் வைத்து கடந்த யூலை 30ஆம் திகதி கடற் படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு இன்று புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

 மேற்படி வழக்கினை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பருத்தித்துறை நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம், இந்த 34 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் செப்டெம்பர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு Reviewed by Admin on August 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.