அண்மைய செய்திகள்

recent
-

மடு மாதாவை நோக்கி படையெடுக்கும் பக்தர்கள்

மன்னார் மடு மாதா பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எதிர்வரும் 15ம் திகதி நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க மன்னார் மடு மாதா தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு இவ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ பக்தர்கள் மடு மாதா திருவிழாவில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து மடுவுக்கு செல்கின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 இவர்களின் பாதுகாப்புக்காக விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாகன சாரதிகளும் பொலிஸாரின் நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மடு திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வரும் பக்தர்களை அழைத்து வரும் வாகன சாரதிகள் மது அருந்தி விட்டு வாகனத்தை செலுத்தக் கூடாது தேவைக்கு அதிகமான பயணிகளையோ பொருட்களையோ வாகனங்களில் ஏற்றிச் செல்லக் கூடாது என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

 அத்துடன் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்தக் கூடாது பழுதடைந்த வாகனங்களை பயன்படுத்தக் கூடாது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்


மடு மாதாவை நோக்கி படையெடுக்கும் பக்தர்கள் Reviewed by Admin on August 08, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.