அண்மைய செய்திகள்

recent
-

பொன்ரேறா 14 நாட்களுக்குள் பொருட்களை அகற்றும்

நீதிமன்றத்தின் கட்டளையின் பிரகாரம் பொன்ரேறா நிறுவனம் தனது உற்பத்தி பொருட்களை கடைகளிலிருந்து 14 நாட்களுக்குள் அகற்றுவதை உறுதிசெய்யும் என்று நுகர்வோர் அதிகார சபை திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

 நீதிமன்றத்தினால் கடந்த திங்கட்கிழமை வழங்கப்பட்ட கட்டளையை தொடர்ந்து, சகல பொன்ரேறா உற்பத்திகளும் கடைகளிலிருந்து மீளப்பெறப்படுவதை கண்காணித்து வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் றுமி மர்சூக் தெரிவித்துள்ளார்.

 பொன்ரேறா நிறுவனத்தினர் சகல கடைகளிலிருந்தும் தமது உற்பத்தி பொருட்களை அகற்றியே தீரவேண்டும். இதை 24 மணிநேரத்தில் செய்யமுடியாது. பொருட்களை மீளப்பெற்றுக்கொள்வதற்கு காலம் தேவை. அவர்கள் அதிசயம் புரிவர் என்று எதிர்பார்க்க முடியாது என்று மர்சூக் தெரிவித்தார்.

 நீதிமன்ற கட்டளையின் மூலம் பொன்ரேறா பொருட்களை விளம்பரப்படுத்தல் தடுக்கப்பட்டுள்ளது. ஏதாவது விளம்பரப்படுத்தல் காணப்படின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் நுகர்வோர் விவகார அதிகார சபையும் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பொன்ரேறா 14 நாட்களுக்குள் பொருட்களை அகற்றும் Reviewed by Admin on August 20, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.