அண்மைய செய்திகள்

recent
-

கடல் தொழில் அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு-படங்கள்

கடல் தொழில்  அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நிறைவுற்ற நிலையில் அவை இன்று திங்கட்கிழமை வைபவ ரீதியாக திறக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மன்னார் பேசாலை கடற்கரை வீதியில்; 5 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட திறந்த கிணறு இன்று காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மன்னார் புதுக்குடியிருப்பு கிராமத்தில் 19 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு கடல் தொழில் சேவை நிலையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மன்னார் எருக்கலம் பிட்டி கிராமத்தில் 19 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட எருக்கலம்பிட்டி கடற்கரை வீதி திறந்து வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 19 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மன்னார் பள்ளிமுனை மீனவர் கூட்டுறவுச்சங்க கட்டிடம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர் றிஸாட் பதீயுதின்,கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜீத சேனாரட்ன,பிரதியமைச்சர் சரத்குமார குனரட்ன,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

இதன் போது  மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவிப்பணிப்பாளர் எஸ்.மெரான்டா,அமைச்சாரின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் என்.எம்.முனவ்பர்,மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன்  உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
















கடல் தொழில் அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு-படங்கள் Reviewed by Admin on August 12, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.