அண்மைய செய்திகள்

recent
-

குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேசிய மருந்துக் கொள்கை தயாரிக்கப்படுகிறது: மைத்திரிபால சிறிசேன

நாட்டில் பிறக்­கின்ற ஒவ்­வொரு குழந்­தை­க­ளி­னதும் எதிர்­கால நலனைக் கருத்­திற்­கொண்டு தேசிய மருந்துக் கொள்கை ஒன்றை தயா­ரித்­து­வ­ரு­கின்றோம். விரைவில் அதனை நிறை­வேற்ற முடியும் என்று நம்­பு­கின்றோம் என சுகா­தார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரி­வித்தார்.

 கொழும்பில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அமைச்சர் அங்கு மேலும் கூறி­ய­தா­வது, நாட்டில் தேசிய மருந்துக் கொள்கை ஒன்றை தயா­ரிக்கும் நோக்கில் கடந்த இர­ண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் நட­வ­டிக்கை எடுத்தோம். தேசிய கொள்கை தொடர்­பான சட்­ட­மூ­லத்­தையும் தயா­ரித்தோம்.

 ஆனால் அதனை சட்ட வரைபு திணைக்­க­ளத்­துக்கு அனுப்­பி­யதும் அது காணாமல் போய்­விட்­டது. அந்த ஆவ­ணத்­துக்கு பொறுப்­பாக இருந்த அதி­காரி இன்று ஒரு நிறு­வனம் ஒன்றின் ஆலோ­ச­க­ராக இருக்­கின்றார். அந்த வகையில் தற்­போது இரண்­டா­வது கொள்­கையை தயா­ரித்­து­வ­ரு­கின்றோம். விரைவில் இது குறித்து இறுதிக் கட்ட பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெ­ற­வுள்­ளன. எனவே விரைவில் மருந்­துகள் குறித்த தேசிய கொள்­கையை தயா­ரிக்க முடியும் என்று நம்­பு­கின்றோம். 

இதனை மிகவும் ஆர்­வ­மாக முன்­னெ­டுக்­கின்றோம். காரணம் நாட்டில் பிறக்­கின்ற ஒவ்­வொரு குழந்தைகளினதும் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டே தேசிய மருந்துக் கொள்கையை தயாரித்துவருகின்றோம்.

குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேசிய மருந்துக் கொள்கை தயாரிக்கப்படுகிறது: மைத்திரிபால சிறிசேன Reviewed by Admin on September 17, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.