நெடுந்தீவுக்கு மின் வழங்க ஏற்பாடு.
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் நெடுந்தீவுப் பிரதேசத்திற்கு மின்சாரம் வழங்கும் வேலைகள் துரிதமாக
இடம்பெற்று வருகின்றன.
இதற்குத் தேவையான சீமெந்திலான 950 மின் கம்பங்கள், பாரம்தூக்கி பொருத்தப்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட பொருட்கள் கடற்படையினரின் கப்பல் மூலம் நெடுந்தீவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதேவேளை வீதியோரங்களில் மின் விநியோகத்திற்கு இடையூறாகக் காணப்படுகின்ற மரங்கள் இயந்திரங்களின் உதவியுடன் வெட்டி அகற்றப்படுவதாக நெடுந்தீவுப் பிரதேச சபைத் தவிசாளர் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவுக்கு மின் வழங்க ஏற்பாடு.
Reviewed by Admin
on
September 15, 2013
Rating:

No comments:
Post a Comment