அண்மைய செய்திகள்

recent
-

அருள் மிகு கற்பகப் பிள்ளையார் ஆலய புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டாபந்தன மஹா கும்பாபிசேக பெருவிழா -படங்கள்

இந்து சமுத்திரத்தின் முத்தாய் திகழும் ஈழத்  திருநாட்டில் கடலும் வயலும் சூழ்ந்த நல்  வளங்கள் நிறைந்த மன்னார் கள்ளியடிப்பகுதியில் வீற்றிருந்து அகிலமெங்கும் வாழ்கின்ற தன அடியவர் குறை களைந்து காத்தருளும் கற்பகப் பிள்ளையார்,இலக்குமித்தாயார்,பாலமுருகன், நவநாயகர்,வைரவர் முதலான பரிவார  தெய்வங்களிர்க்கும் நிகழும் மங்கள கரமான விஜய வருடம் ஆவணி 26 ம் நாள் 11.09.2013புதன் கிழமை அனுச நட்சத்திரமும் சஷ்டித்திதியும் சித்த யோகமும் கூடிய காலை 7.35 மணி முதல் 8.25 மணி வரை உள்ள கன்னி லக்கினத்தில் மகா கும்பாபிசேகம் நிகழ திருவருள் கூடி உள்ளது.

  எனவே இன்று புதன் கிழமை காலை 5 மணி முதல் விநாயகர் வழிபாடு 4ம் கால யாக பூஜை மஹா பூர்ணா குதி தீபாராதனை வேத ஸ்தோத்திர ,திராவிட வேத ,நாத கீத வாத்திய சமர்ப்பணம் ,அந்தர்  பலி ,  பகிர்பலி கும்பங்கள் புறப்பாடு விமானங்கள் அபிசேகம் 7.35 மணி முதல் 8.45 இற்குள் மஹா கும்பாபிசேகம் தச மங்கள தரிசனம் ,எஜமான் அபிசேகம்,ஆசியுரைகள்,மஹா அபிசேகம் பிரசாதம் வளங்கள் போன்ற நிகழ்வுகள் நடை பெறுகின்றன .

மாலை 6 மணி முதல் விசேட பூஜை ,கூட்டு வழிபாடு வசந்த மண்டப பூஜை வினாயகப் பெருமான்  உள்  வீதி வெளிவீதி உலா இடம் பெற்று பிரசாதம் வழங்கப்படும் .


கிரியா கால குருமார்கள் 

சிவஸ்ரீ .பஞ்சாட்சர.பாலசுப்ரமணிய சிவாச்சாரியார் நல்  ஆசிகளுடன்

 பிரதிஷ்டா  பிரதம குரு 

சிவஸ்ரீ.தியாக.கருணானந்த குருக்கள்
(பிரதம குரு திருக்கேதீச்சர திருத்தலம்)

சிவஸ்ரீ .குக.வல்லபேஸ்வரகுருக்கள்
(அராலி )

சிவஸ்ரீ.செல்வகுமாரகுருக்கள்
(யாழ்ப்பாணம்)

சர்வாதகம் 

சிவாகமரத்தனம் ' சிவஸ்ரீ பிரதீபக் குருக்கள் (அராலி )
சிவஸ்ரீ .ரவீந்திரக்குருக்கள் (வவுனியா )
சிவஸ்ரீ .எஸ்.கணனாதசர்மா (கொழும்புத்துறை )


சிறப்பிக்கும்  சிவாச்சாரியர்கள் 

சிவஸ்ரீ.ச.சிவசுதர்மா
(கொழும்பு )



 ஈ.குகன்சர்மா போன்ற குருக்கள் சிறப்பிக்கின்றனர்



































மேலும் படங்கள்


அருள் மிகு கற்பகப் பிள்ளையார் ஆலய புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டாபந்தன மஹா கும்பாபிசேக பெருவிழா -படங்கள் Reviewed by Admin on September 11, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.