அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஊடகவியலாளருக்கு புலனாய்வுத் துறையினரால் அச்சுறுத்தல்

மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளர் பி.ஏ.அந்தோனி மார் என்பவரை இனம் தெரியாதவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் அவருடைய வீட்டிற்குச் சென்று அச்சுறுத்தியுள்ளதாக அவர் நேற்று மாலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

 நேற்று மதியம் மூர்வீதியில் உள்ள அவருடைய வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அவருடைய வீட்டினுள் சென்று தாங்கள் இருவரும் புலனாய்வுத்துறையினர் என கூறி தனது சகல விபரங்களையும் திரட்டியதாகவும், கடும் தொனியில் தன்னுடன் கதைத்து விபரங்களை திரட்டிச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 இவர்கள் உண்மையான புலனாய்வுத்துறையினரா?அல்லது வேறு யாருமா என்பது தனக்கு தெரியாது எனவும் இவர்கள் தொடர்பில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.



மன்னார் ஊடகவியலாளருக்கு புலனாய்வுத் துறையினரால் அச்சுறுத்தல் Reviewed by Admin on September 11, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.