அண்மைய செய்திகள்

recent
-

பெரும்போக பயிர்ச்செய்கைக்கு நீரில்லை' மாந்தை கிழக்கு விவசாயிகள் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்குப் பிரதேசத்தில் இந்த வருடத்திற்கான பெரும்போக செய்கைக்கு நீரின்மையால் , தாங்கள் இப்போது மழையை நம்பியிருப்பதாக மாந்தை கிழக்கு விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர் .

 மாந்தை கிழக்கு பிரதேசத்தில் வவுனிக்குளத்தின் கீழ் 35 ஏக்கரில் பெரும்போக செய்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கும் விவசாயிகள் , இம்முறை மழையின்மையால் வரணிக்குளத்திலும் நீர் போதாமையுள்ளதாகவும் இதனால் தற்போது பெரும்போக செய்கை மேற்கொள்ள முடியாது தாம் மழையை நம்பியே இருப்பதாக தெரிவிக்கின்றனர் .

 இதேவேளை , கடந்த வருடமும் பெரும்போக செய்கையை மேற்கொண்ட விவசாயிகள் , தத்துப்பூச்சியின் தாக்கத்தினால் நட்டம் அடைந்தனர் . எனினும் , இவ் வருடம் நட்டத்தை எதிர்நோக்காது பெரும்போக செய்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் இதற்கு நீர்த்தேவை பெரும் சவாலாக இருப்பதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர் .

பெரும்போக பயிர்ச்செய்கைக்கு நீரில்லை' மாந்தை கிழக்கு விவசாயிகள் பாதிப்பு Reviewed by Admin on September 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.