இலங்கை கடல் எல்லைக்குள் வைத்து கைது செய்யப்பட்ட 20 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைப்பு.
இலங்கை கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 20 பேரை கடற்படையினர் கைது செய்து நேற்று தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் தலைமன்னார் பொலிஸார் விசாரனைகளின் பின்னார் குறித்த மீனவர்களை இன்று திங்கட்கிழமை காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான்; ஆனந்தி கனகரட்னம் குறித்த மீனவர்களை எதிர் வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். குறித்த மீனவர்கள் சார்பாக சட்டத்தரணி ரி.வினோதன் ஆஜராகினார். இதே வேளை ஏற்கனவே கைது செய்யப்பட்ட 41 இந்திய மீனவர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி புதன் கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இலங்கை கடல் எல்லைக்குள் வைத்து கைது செய்யப்பட்ட 20 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைப்பு.
Reviewed by Admin
on
September 23, 2013
Rating:

No comments:
Post a Comment