இந்திய நிறுவனத்திடமிருந்து மருந்து கொள்வனவு தற்காலிகமாக இடைநிறுத்தம்
ஏதாவதொரு நிறுவனம் பல தடவைகளில் இவ்வாறு தவறிழைத்தால் அது அமைச்சின் கீர்த்திக்கு மாசு கற்பிக்குமென அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.இத்தகைய தவறிழைக்கும் நிறுவனங்களை ஒதுக்கி வைக்குமாறும், உற்பத்திகளை தற்காலிகமாக இடை நிறுத்துமாறும் தொடர்ந்து அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிறுவனம் கடந்த ஆண்டில் உற்பத்தி செய்த சில மருந்து தொகுதிகள் தரமற்றவை என உறுதியானது.இவற்றை உடனடியாக பாவனையிலிருந்து அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும், நாட்டுக்குள் கொண்டு வரப்படும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்வதற்காக சகல கட்டங்களிலும், கவனமாக நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அமைச்சர் மருத்துவ தொழில்நுட்ப விநியோகப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்திய நிறுவனத்திடமிருந்து மருந்து கொள்வனவு தற்காலிகமாக இடைநிறுத்தம்
Reviewed by Admin
on
September 10, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment