அண்மைய செய்திகள்

recent
-

வெற்றி பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு மன்னார் அரச அதிபர் வாழ்த்து(படங்கள் )

நடைபெற்று முடிவடைந்துள்ள வாட மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் 5 ஆசனங்களில் 3 ஆசனங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைபற்றியுள்ளது.

அதேபோன்று ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 1ஆசனத்தையும் ,சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.

வெற்றி பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள்  மன்னார் அரச அதிபர் எம்.வை.எஸ்.தேசபிரியவை சந்தித்து உரையாடினார்கள்

இதன்போது வெற்றிபெற்ற உறுப்பினர்களான எஸ்.பிறிமொஸ் சிராய்வா (சட்டதரணி), பாலசுப்ரமணியம் டெனிஸ்வரன்  (சட்டதரணி), ஞானசீலன் குணசீலன் (டாக்டர்) ஆகியோர் அரச அதிபர் எம்.வை.எஸ்.தேசபிரியவுடன் உரையாடுவதை படங்களில் காணலாம்.

இதன் போது அரச அதிபர் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்த தோடு இன ஜக்கியத்தை மேம்படுத்த ஒன்றிணைந்து செயற்படுமாறு தெரிவித்தார்.

லுயிஸ் மார்சல் - மன்னார்






வெற்றி பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு மன்னார் அரச அதிபர் வாழ்த்து(படங்கள் ) Reviewed by NEWMANNAR on September 23, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.