அண்மைய செய்திகள்

recent
-

என்னையும்,சக உறுப்பினர்களையும் ஆதரித்த அனைத்து மக்களுக்கும் நன்றிகள்-வைத்திய கலாநிதி ஜீ.குனசீலன்.

வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட என்னையும்,சக உறுப்பினர்களையும் வெற்றியடையச் செய்த மன்னார் மாவட்ட மக்கள் அனைவருக்கும் எனது இனிய நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குனசீலன் தெரிவித்தார்.


இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,

கடந்த காலங்களில் இடம் பெற்ற தேர்தலை விட இந்த வடமாகாண சபை தேர்தலில் தமிழ் மக்கள் ஒருமித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு வாக்களித்துள்ளீர்கள்.

தமிழ் மக்களின் வாக்குகள் மிகக்குறைந்த அளவிலேயே மாற்றுக்கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனவே மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட என்னையும்,சக வேட்பாளர்கள் இருவரையும் இந்த மன்னார் மக்கள் வெற்றியடையச் செய்துள்ளீர்கள்.

மக்களின் ஒற்றுமை இனி தொடர்ந்தும் தேவை.உங்களுக்காக நாங்கள் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பாடுவோம்.

எனவே எங்களை ஆதரித்த அணைத்து உள்ளங்களுக்கும், நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(மன்னார் நிருபர்)
(23-09-2013)
என்னையும்,சக உறுப்பினர்களையும் ஆதரித்த அனைத்து மக்களுக்கும் நன்றிகள்-வைத்திய கலாநிதி ஜீ.குனசீலன். Reviewed by NEWMANNAR on September 23, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.