முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் சட்டவைத்திய அதிகாரிகள் இல்லை. பிரதேச மக்கள் அசெளகரியம்.
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் சட்டவைத்திய அதிகாரி இல்லாமையினால்
இப் பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் .
கடந்தகால யுத்தம் நிறைவடைந்து 2009 ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் இயங்கிவருகின்ற இவ் வைத்தியசாலையில் கடந்த செப்டெம்பர் மாதத்திற்குப் பின்னர் சட்ட வைத்திய அதிகாரி இல்லாத நிலை காணப்படுகின்றது .
மரணச்சான்றிதழ் , விபத்து சார்ந்த அறிக்கைகள் , வழக்குகள் சார்ந்த அனைத்து செயற்பாடுகளுக்கும் சட்டவைத்தியரின் தேவை காணப்படுகின்றது
.
இந்த அதிகாரி இல்லாமையினால் இவ் வைத்தியசாலைக்குச் செல்கின்ற மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர் .
மேலும் சட்ட வைத்திய அதிகாரி இல்லாமையினால் அனுராதபுரம் , வவுனியா வைத்தியசாலைகளுக்குச் செல்லவேண்டி உள்ளதாகவும் அத்துடன் விபத்துக்கள் மற்றும் குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் , வழக்குகள் ஆகியவற்றின் அறிக்கைகளைப் பெறமுடியாத நிலையும் காணப்படுகின்றது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் .
எனவே , முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விரைவில் சட்ட வைத்தியரை நியமிக்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் சட்டவைத்திய அதிகாரிகள் இல்லை. பிரதேச மக்கள் அசெளகரியம்.
Reviewed by Admin
on
October 16, 2013
Rating:

No comments:
Post a Comment