புத்தளம் - மன்னார் வீதியில் வௌ்ளம்
கடும் மழையால் புத்தளம் - மன்னார் வீதியின் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
புத்தளம் மன்னார் வீதியின் எழுவான்குளம் பகுதியில் சுமார் மூன்று அடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் புத்தளம் மாவட்ட உதவிப் பணிப்பாளர் கேர்ணல் ஆர்.ஏ.கே.ரணவீர தெரிவித்துள்ளார்.
இதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடும் மழையை அடுத்து எழுவான்குளம் பகுதியில் வீதி நீரில் மூழ்கியுள்ளதாக மன்னார் மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.சி.எம்.ரியாஸ் தெரிவித்துள்ளார்.
புத்தளம் - மன்னார் வீதியில் வௌ்ளம்
Reviewed by Admin
on
October 20, 2013
Rating:

No comments:
Post a Comment