அண்மைய செய்திகள்

recent
-

கஞ்சா போதைப்பொருளுடன் கைதானவர் விளக்கமறியலில் வைப்பு

தலைமன்னார்- பேசாலை பிரதான வீதியில் வைத்து நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமை கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் ஆனந்தி கனகரெட்ணம் நேற்று (23-10-2013) புதன் கிழமை உத்தரவிட்டார்.
தலைமன்னார் - பேசாலை பிரதான வீதியில் வைத்து நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமை 1 கிலோ 300 கிராம் நிறை கொண்ட கஞ்சா போதைப்பொருளுடன் விசேட அதிரடிப்படையினர் ஒருவரை கைது செய்து தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 

தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளின் பின் குறித்த நபரை நேற்று புதன் கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

 இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஆனந்தி கனகரெட்ணம் குறித்த நபரை எதிர்வரும் 5 ஆம் திகதி (05-10-2013) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
கஞ்சா போதைப்பொருளுடன் கைதானவர் விளக்கமறியலில் வைப்பு Reviewed by Admin on October 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.