அண்மைய செய்திகள்

recent
-

மன். புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலயத்தின் வருடார்ந்த ஆசிரியர் தின நிகழ்வுகள் 2013.


மன். புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலயத்தில் வருடந்தோறும் நடைபெறும் ஆசிரியர் தின நிகழ்வுகள் 08.10.2013 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு திருப்பலியுடன் கல்லூரிமுதலவர் அருட் சகோ எஸ். சந்தியாகு (எப்.எஸ்.சி) தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக பிரதம விருந்தினராக ஓய்வுபெற்ற மன்னார் வலயக்கல்விபணிப்பாளர் திரு எம். ஆபேல் றெவலன் அவர்களும் அவர்தம் பாரியாரும்
 சிறப்பு விருந்தினராக பங்குத்தந்தை அருட் பணி ஜெயபாலன் அவர்களும் திருக்குடும்ப கன்னியர் மடத்தலைவி அருட் சகோதரி பாஸ்கல் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அழைக்கப்பட்டவர்கள் ஆசிரியர்களின் பணிவாழ்வு பற்றி வாழ்த்தி பல அரிய நல்ல கருத்துக்களைக் கூறியதுடன் மாணவர்களால் ஆடல் இபாடல்இ கவிதை இபேச்சு போன்ற கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
தொடர்ந்து இவ்விருந்தினர்கள் முதியோர்களை சிறப்பாக வரவேற்று பல கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் முதியோரின் ஆசிரையும் மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து ஓய்வுபெற்ற மன்னார் வலயக்கல்விபணிப்பாளர் திரு எம். ஆபேல் றெவல்அவர்களுக்கு கல்லூரி முதல்வர் நினைவுச் சின்னத்தினை வழங்கி கௌரவித்தார்.



மன். புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலயத்தின் வருடார்ந்த ஆசிரியர் தின நிகழ்வுகள் 2013. Reviewed by Author on October 25, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.