பாட நூல்களில் காணப்படும் இலக்கணப் பிழைகளை திருத்த நடவடிக்கை
பாடசாலை பாட நூல்களில் உள்ள இலக்கண மற்றும் எழுத்துப் பிழைகளை திருத்துவதற்காக பேராசிரியர்கள் குழுவென்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் 14 பேராசிரியர்கள் அங்கம் வகிப்பதாக கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் திஸ்ஸ ஹேவாவித்தாரண தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த குழுவிற்கான பேராசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பாடநூல்களில் காணப்படுகின்ற அனைத்து இலக்கண மற்றும் எழுத்துப் பிழைகளையும் கண்டறிந்து அவற்றை திருத்துவதற்கான நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்த குழு தெரிவித்துள்ளது.
பாட நூல்களில் காணப்படும் இலக்கணப் பிழைகளை திருத்த நடவடிக்கை
Reviewed by NEWMANNAR
on
November 17, 2013
Rating:

No comments:
Post a Comment