சம்பள உயர்வு கோரி இருபதாம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டம்.
வரவு - செலவுத் திட்டத்தில் அரச , தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கோரி அரச தனியார் துறை
தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக அரச தனியார் துறை தொழிற்சங்கங்களின் கூட்டுக் கமிட்டி ஏற் பாட்டாளர் வசந்த சமரசிங்க தெரிவிக்கின்றார் .
வாழ்க்கை செலவு அதிகரிப்பால் அரச தனியார் ஊழியர்கள் வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் திண்டாடுகின்றனர் . எனவே 21 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு - செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் தொழிற் சங்கங்களின் கூட்டுக் கமிட்டி தெரிவித்துள்ளது .
சம்பள உயர்வு கோரி இருபதாம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டம்.
Reviewed by NEWMANNAR
on
November 17, 2013
Rating:

No comments:
Post a Comment