அண்மைய செய்திகள்

recent
-

2015 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் மாநாடு மால்டாவில் நடைபெறும்: அரச தலைவர்கள் ஏகமனதாக முடிவு

2015 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை மால்டா நாட்டில் நடத்துவது என பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் இன்று காலை ஏகமனதாக தீர்மானித்தனர். இது எதிர்பார்க்கப்படாத முடிவு என கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள மால்டா நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜோசப் மஸ்கட் தெரிவித்தார். 

 2015 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்துவதில் இருந்து மொரீசியஸ் விலகி கொண்டதை அடுத்து மால்டாவுக்கு அந்த மாநாட்டை நடத்தும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடான மால்டா ஏற்கனவே 2005 ஆம் ஆண்டில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்தியுள்ளது. 

 மால்டாவுக்கு பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்த மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்திருப்பது அந்த அமைப்பின் நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகள் மத்தியில் மரியாதை பலப்படுத்த கிடைத்து்ளள முக்கியமான சந்தர்ப்பம் என ஜோசப் மஸ்கட் குறிப்பிட்டார். 2015 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை மொரீசியஸில் நடத்த அந்த அமைப்பு தீர்மானித்திருந்தது. 

 இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பிரச்சினையை காரணம் காட்டி அந்த நாடு கொழும்பு மாநாட்டை புறக்கணித்ததுடன் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்துவதில் இருந்து விலகிக் கொண்டது.
2015 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் மாநாடு மால்டாவில் நடைபெறும்: அரச தலைவர்கள் ஏகமனதாக முடிவு Reviewed by NEWMANNAR on November 17, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.