முல்லைத்தீவு மாவட்டத்தில் 49 பயனாளிகளுக்கு நிரந்தர வீட்டுத்திட்ட அடிக்கல் நாட்டு வைபவம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நீராவிப்பிட்டி கிழக்கு கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 49 பயனாளிகளுக்கான ஜரோப்பிய ஒன்றியம், அவுஸ்ரேலிய அரசாங்கம் (AUSAID) மற்றும் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பிற்குமான சுவிஸ் முகவர் அமைப்பு (SDC) என்பவற்றின் நிதிப்பங்களிப்புடன் ஐ.நா வாழ்வக ஸ்தாபனம் (UN-Habitat) இனால் நடைமுறைப்படுத்தப்படும் நிரந்தர வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 12.11.2013 செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கரைதுறைப்பற்று உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.குருபரன், UN-Habitat இன் உதவித்திட்ட முகாமையாளர் A.H.M.ஜெஸீர், மற்றும் பொறியியலாளர் என். பிரசாந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 49 பயனாளிகளுக்கு நிரந்தர வீட்டுத்திட்ட அடிக்கல் நாட்டு வைபவம்
Reviewed by NEWMANNAR
on
November 13, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 13, 2013
Rating:


No comments:
Post a Comment