கிளிநொச்சி வாகன விபத்தில் ஒருவர் பலி
கிளிநொச்சி கல்லாறு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உழவு இயந்திரம் ஒன்றில் பயணித்த குறித்த நபர் தவறி வீழ்ந்ததை அடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.
இதேவேளை, உழவு இயந்திரத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
கிளிநொச்சி வாகன விபத்தில் ஒருவர் பலி
Reviewed by NEWMANNAR
on
November 13, 2013
Rating:

No comments:
Post a Comment