அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் இணையத்திற்கு திருக்கேதீச்சரம் சிவன்அருள் இல்லத்தின்; வாழ்த்தும் பாராட்டும்

ஐந்தாவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் எமது பேரன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய 'மன்னார் இணையத்திற்கு' , புனித பாலாவிக் கரைமீதமர்ந்த கௌரியம்பாள் உடனுறை திருக்கேதீச்சரப் பெருமான் அருளாட்சி புரியும் திருக்கேதீச்சர வளாகத்தில் அமைந்துள்ள 'சிவன்அருள் இல்ல'த்தின் நிறுவுனர்கள், பணிப்பாளர்கள், பணியாளர்கள், இல்லத்தினால் பராமரிக்கப்பட்டு வரும் நூற்றுக்கும் அதிகமான சிறுவர் சிறுமியர்கள் அனைவர் சார்பாகவும் எமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

 அனைவரையும் முந்திக்கொண்டு மன்னார்ச் செய்திகளை நடுநிலையோடும் காத்திரமாகவும் கனதியாகவும் சுடச்சுட வெளியிடுவது பாராட்டுதற்குரியது. மிகவும் சவால்கள் நிறைந்த ஊடகத்துறையில் நான்கு ஆண்டுகள் நிறைவாகப் பணியாற்றுவதே மிகவும் போற்றுதற்குரியது. சவால்களைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறுங்கள். எம்பெருமானும் பிராட்டியும் என்றென்றும் உங்களுக்குத் துணைபுரிவார்களாக!
மன்னார் இணையத்திற்கு திருக்கேதீச்சரம் சிவன்அருள் இல்லத்தின்; வாழ்த்தும் பாராட்டும் Reviewed by NEWMANNAR on November 10, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.