உயர்தரத்தில் ஏ சித்திகளை பெற்றும் பல்கலைக்கழகம் தெரிவாகாத மாணவர்கள் குறித்து ப. மா. ஆ. கரிசனை
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளுடன் சித்தியடையடைந்தும், மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைக்காமை தொடர்பில் பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஷனிகா ஹிரிம்புரகமகே தெரிவித்தார்.
வர்த்தக பிரிவில் உயர்கல்வி கற்ற பெரும்பாலான மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்கான அனுமதி கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
மாணவர்களின் பல்கலைக்கழ அனுமதிக்கு இஸட் புள்ளிகள் மிகவும் அவசியம் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
உயர்தரத்தில் ஏ சித்திகளை பெற்றும் பல்கலைக்கழகம் தெரிவாகாத மாணவர்கள் குறித்து ப. மா. ஆ. கரிசனை
Reviewed by NEWMANNAR
on
November 29, 2013
Rating:

No comments:
Post a Comment