வாய்க்கால் மூடப்பட்டமையினால் நானாட்டான் விவசாயிகள் பாதிப்பு
மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட புத்திரகண்டான் விவசாய கிராமத்தில் உள்ள மூன்று கழிவு நீர் வாய்க்கால்கள் மூடப்பட்டுள்ளமையினால் அக்கிராமத்தைச் சேர்ந்த விவசாய மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இவ்விடையம் தொடர்பாக அந்த மக்கள் மேலும் தெரிவிக்கையில்இஇஇ
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட புத்திரகண்டான் குளத்தின் கீழ் 90 ஏக்கர் காணி உள்ளது. அதில் 60 ஏக்கர் காணிக்கு மூன்று கழிவு நீர் வாய்க்கால் உள்ளது.
ஆனால் தற்போது மூன்று கழிவு நீர் வாய்க்காலும் மூடப்பட்டு விட்டது. தற்போது பெரும் போக விவசாயம் செய்யும் காலமும் வந்து விட்டது.
ஆனால் குறித்த வாய்க்கால் இல்லாமல் தற்போது விவசாயம் செய்வதில் அக்கிராம விவசாய மக்களாகிய நாங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றோம்.
முதலாவது வாய்;க்கால் புத்திரகண்டான்; குளத்தில் இருந்து வந்து நானாட்டான் வீதியில் இருக்கும் குழாயினூடாக கார்மேல் மாதா கோயிலுக்கருகாமையில் உள்ள வாய்க்காலைச் சென்றடைகின்றது.
குறித்த வாய்க்காலை அதற்கு அருகாமையில் குடியிருக்கும் சிலர் மூடி விட்டனர்.தற்போது குறித்த வாய்க்கால் திறக்கப்பட்டு புனரமைக்கப்படாது விட்டால் அப்பகுதியில் குடியிருப்போரும்இவிவசாய செய்கைகளும் வெள்ளத்தில் மூழ்கவேண்டிய நிலை ஏற்படும்.
இவ் வாய்க்கால் அமைந்திருக்கும் காணியில் குடியிருப்பவர்கள் அடாத்தாக குடியிருப்பவர்களாவர்.
இந்த வாய்க்கால் பல வருடங்களாக உள்ளது. இக்காணிக்கு உரிமையாளர் வெளிநாட்டில் உள்ள நிலையில் அடாத்தாக உள்ளவர்கள் போலி உறுதி எழுதி குறித்த வாய்க்காலையும் மூடி குடியமர்ந்துள்ளனர்.
இரண்டாவது கழிவு வாய்க்காலனது அளவக்கைஇ ஆத்திக்குழி சேமக்காளை வீதி அமைத்ததால் மூடப்பட்டு விட்டது.
இவ் வீதி கிராம அபிவிருத்திச்சங்கத்தின் கலந்துரையாடலினூடாக அமைக்கப்பட்ட போதும் விவசாயிகளிடம் இது தொடர்பாக எந்த ஆலோசனைகளும் கேட்கப்படவில்லை.
இது தொடர்பாக கேட்கப்போனதிற்கு எங்களை விரட்டி விட்டார்கள்.
நாங்கள் உடனடியாக இதைப்பற்றி சம்;பந்தப்பட்ட அதிகாரிகளிடமும்இஉரிய அமைப்பிடமும் சொன்னோம்.
எந்த முடிவும் எடுக்கவில்லை.உரிய பொறியியளாளரிடமும் கூறினோம்.ஆனால் இந்த வாய்க்கால் இது வரை திறக்கப்படவில்லை.
குறித்த வாய்க்கால் திறக்கப்படாது விட்டால் நாங்கள் பெரும்போகம் செய்ய முடியாது. இதனால் நாங்கள் உணவிற்காக துண்பப்படும் நிலை ஏற்படும். எனவே உரிய அதிகாரிகள்; குறித்த விடையத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வடமாகாண விவசாய அமைச்சர் பி.ஐங்கர நேசன் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கலான செல்வம் அடைக்கலநாதன்இஎஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோரது கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
வாய்க்கால் மூடப்பட்டமையினால் நானாட்டான் விவசாயிகள் பாதிப்பு
Reviewed by Author
on
November 18, 2013
Rating:

No comments:
Post a Comment