வன்னியிலுள்ள ஆங்கில ஆசிரியர்களுக்கு மன்னாரில் ஆங்கில பயிற்ச்சி பட்டறை -படங்கள்
தெரிவு செய்யப்பட்ட ஆங்கில ஆசிரியர்களுக்கான ஆங்கில மொழிக்கான சிறப்பு பயிற்ச்சி நெறி இன்று காலை திங்கள்கிழமை மன்னாரில் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த ஆங்கில பயிற்ச்சி நெறி பட்டறையினை பிரதமவிருந்தினராக கலந்து கொண்ட மன்னார் வலயகல்வி பணி;ப்பாளர் எம்.எம் . சியான் அவர்கள் வைபவரீதியாக ஆரம்பித்துவைத்தார்.
வட மாகாண ஆங்கில உதவிமையத்தின் முகாமையாளர் திரு.எஸ்.ஏ.ராஜன் குரூஸ் தலைமையில் நடைபெற்ற குறித்த பயிற்ச்சி செயலமர்விற்கான நிதியுதவியினை ஜே.ஆர்.எஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.
இன் நிகழ்வில் மன்னார் >வவுனியா>முல்லைத்தீவு >கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 75 ஆசிரியர்கள் குறித்த பயிற்ச்சி;பட்டறையில் கலந்து கொண்டு பயனடையவுள்ளனர்.
இன்று திங்கள்கிழமை 11ம் திகதி முதல் எதிர்வரும் 20ம் திகதிவரை குறித்த ஆங்கில பயிற்ச்சி பட்டறை நடைபெறவுள்ளது.
ஆங்கில ஆசிரியர்களின் மொழித்திறன் மற்றும் கற்ப்பித்தல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் முகமாக குறித்த பயிற்ச்சிகள் இவ் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.
வன்னியிலுள்ள ஆங்கில ஆசிரியர்களுக்கு மன்னாரில் ஆங்கில பயிற்ச்சி பட்டறை -படங்கள்
Reviewed by Author
on
November 11, 2013
Rating:
No comments:
Post a Comment