இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் பின்னணியை ஆராய விருப்பம்: ஆஸி. செனட்டர்
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு புகலிடக் கோரிக்கையாளர்கள் பெருந்தொகையில் வருவதன் பின்னணியை தான் ஆராய விரும்புவதாகவும் இதன் பின்னர் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் விளக்கமான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க விரும்புவதாகவும் அவுஸ்திரேலிய செனட்டர் லீ றிஹினனன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டுக்கு முன்பாக தான் அங்கு செல்லவுள்ளதாகவும் அவர் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள மக்களுடன் பேசவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் பின்னணியை ஆராய விருப்பம்: ஆஸி. செனட்டர்
Reviewed by Author
on
November 06, 2013
Rating:
Reviewed by Author
on
November 06, 2013
Rating:

No comments:
Post a Comment