அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் முரளி கிண்ணம் இறுதிபோட்டி சிறப்பாக ஆரம்பமாகியது.[படங்கள் இணைப்பு ]

முரளிகிண்ணம் சிநேகபூர்வ கிரிகெற் போட்டிகள் 2013 நேற்று
 ( 05-11-2013 ) கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் சிறப்பாக ஆரம்பமாகியது .
நேற்று  காலை பத்து மணிக்கு ஆரம்பமான நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்தியநாதன் தவநாதன் அவர்களும் கலந்து கொண்டதோடு சிறப்பு அதிதீயாக இலங்கை கிரிகெ ற் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அவர்கள் கலந்துகொண்டார் .

நேற்றய  இறுதி ஆட்டத்தில் முதலாவதாக பெண்களுக்கான போட்டி இடம்பெற்றது இதில் வட மத்திய மாகாண சக்தி அணியினருக்கும் சீனிகம அணியினருக்கும் இடையில் நடைபெற்றது ஆண்களுக்கான போட்டியில் கொழும்பு சென் பீற்றர்ஸ் கல்லூரி அணியினருக்கும் கண்டி கல்லூரி அணியினருக்கும் இடையில் நடைப்பெற்றது .

பெண்களுக்கான போட்டியில் சீனிகம அணியினர் வெற்றிப்பெற்றுள்ளனர்






கிளிநொச்சியில் முரளி கிண்ணம் இறுதிபோட்டி சிறப்பாக ஆரம்பமாகியது.[படங்கள் இணைப்பு ] Reviewed by Author on November 06, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.