அண்மைய செய்திகள்

recent
-

வடக்கின் சகல காவல் நிலையங்களிலும் தமிழ் உத்தியோகத்தர்கள்

வடக்கின் சகல காவல் நிலையங்களிலும் தமிழ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல்துறைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

எதிர்வரும் ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது. முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கு தமிழ் உத்தியோகத்தர்கள் சகல காவல் நிலையங்களிலும் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

 யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற வட மாகாண பிரதிக் காவல்துறை மா அதிபர் ரொஹான் டயஸ் தெரிவித்துள்ளார்.

 அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்கின் சகல காவல் நிலையங்களிலும் தமிழ் உத்தியோகத்தர்கள் Reviewed by Admin on December 27, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.