அண்மைய செய்திகள்

recent
-

ஆழிப்பேரலையின் நினைவு தின த்தை உணர்வு ரீதியாக இறந்துபோன ஒவ்வொரு உயிர்களுக்காகவும் அஞ்சலி செலுத்தும் நாளாக மாற வேண்டும் :அமைச்சர் டெனிஸ்வரன்

ஆழிப்பேரலையின் நினைவு தின த்தை உணர்வு ரீதியாக இறந்துபோன ஒவ்வொரு உயிர்களுக்காகவும் அஞ்சலி செலுத்தும் நாளாக மாற வேண்டும் என அமைச்சர் டெனிஸ்வரன் தெரிவித்தார்

நேற்று மன்னார் திருமறைகலாமன்றத்தில் நடைபெற்ற ஆழிப்பேரலையி ன் 9ம் ஆண்டுநினைவுதின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

எமது மக்களிடையே இன்றைய இந்த 26ஆம் திகதி ஒருமறந்து போன நாள் போலவே இருப்பதாகவும் இந்த இழப்புக்களுக்கு அஞ்சலி செலுத்தும்எண்ணப்பாடுகளும் அருகிச் செல்வதாகவும் அந்த நிலையிலேயே தான் இன்று முல்லைதிவு மற்றும்வடமராட்சி செல்ல திட்டமிட்டிருந்தும் இவ்வாறு ஒரு நிகழ்வை மன்னாரில் திருமறைக்கலா மன்றம்நடாத்தவுள்ளதாக அறிந்தவுடன் எனது பயணத்தை நிறுத்தி விட்டு இந்த நிகழ்வில் கலந்துகொண்டுஆழிப்பேரலையின் கோர தாண்டவத்திற்கு பலியான எனது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவேண்டும்என்று எண்ணினேன் என்றும்.

 எதிர்காலத்தில் இந்த நாளில் எந்த விதமான களியாட்டங்களுக்கோஅல்லது சுப நிகழ்வுகளோ அல்லது கொண்டாட்டன்களோ நடத்தாது மக்கள் உணர்வு ரீதியாக இறந்துபோன ஒவ்வொரு உயிர்களுக்காகவும் அஞ்சலி செலுத்தும் நாளாக மாற வேண்டும் என்றும்ஆழிப்பேரலையினால் உறவுகளை இழந்து நிக்கும் அனைவருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைதெரிவித்ததோடு நிகழ்வை ஒழுங்கு செய்த மன்னார் திருமறை கலாமன்றதினருக்கு தனது விசேடநன்றிகளை தெரிவித்தார்.



ஆழிப்பேரலையின் நினைவு தின த்தை உணர்வு ரீதியாக இறந்துபோன ஒவ்வொரு உயிர்களுக்காகவும் அஞ்சலி செலுத்தும் நாளாக மாற வேண்டும் :அமைச்சர் டெனிஸ்வரன் Reviewed by Author on December 27, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.