தொப்பி மற்றும் பஃர்தா அணிந்து புகைப்படமெடுத்தால் தேசிய அடையாள அட்டை வழக்கப்படமாட்டாது: ஆட்பதிவு திணைக்களம்
2014 ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிப்பவர்கள், மதம் மற்றும் இனத்தை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படம் எடுக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான அடிப்படையில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்குமாயின் ஆள் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது என ஆட்பதிவு திணைக்களத்தின் பொது ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு - கல்லடியில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் முஸ்லிம்கள், கிறிஸ்தவ அருட்தந்தை மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோர் தமது மதத்தை பிரதிபலிக்கும் வகையில், தொப்பி மற்றும் பர்தா அணிந்து புகைப்படம் எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
2014 ம் ஆண்டு ஜுன் மாதத்தின் பின்னர் புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் ஆள் அடையாள அட்டை இலங்கை முழுவதும் வாழும் மக்களுக்கு ஒரே விதமானதாகவும் கலர் புகைப்படத்துடன் சிங்களம் தமிழ் மொழிகளை மாத்திரம் கொண்டு அமைந்திருக்கும்.
எந்தவொரு இன, மத கலாசாரத்தினையும் பிரதிபலிக்கக்கூடிய வகையில் அவை அமைந்திருக்காது என்று குறிப்பிட்டார்.
குறித்த செய்தியாளர் மாநாட்டில் கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன், கபே நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஏ.எச்.ஏ. ஹூஸைன் ஆட்பதிவுத் திணைக்களத்தின் அதிகாரிகள் தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தொப்பி மற்றும் பஃர்தா அணிந்து புகைப்படமெடுத்தால் தேசிய அடையாள அட்டை வழக்கப்படமாட்டாது: ஆட்பதிவு திணைக்களம்
Reviewed by Admin
on
December 14, 2013
Rating:
Reviewed by Admin
on
December 14, 2013
Rating:


No comments:
Post a Comment