நானாட்டான் பிரதேச செயலகம் தாக்கப்பட்டதை கண்டித்து முசலி பிரதேச செயலக பணியாளர்கள் எதிர்ப்பு
நேற்று காலை 9.00 மணியளவில் பொன் தீவு கண்டல் பிரதேச மக்களினால் நானாட்டான் பிரதேச செயலகம் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று முசலி பிரதேச செயலாளர் தலைமையில் அமைதி வழியிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பிரதேச செயலகத்துக்கு முன்னால் நடைபெற்றது.
இதே போன்று மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் ஆர்பாட்டம் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறான செயற்பாடு கண்டிக்கத்தக்கது.
இவ்வாறான செயற்பாடுகள் இடம் பெறாமல் இருப்பதற்கு உரிய அதிகாரிகள் எதிர்வரும் காலங்களில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென முசலி பிரதேச செயலக ஊளியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நானாட்டான் பிரதேச செயலகம் தாக்கப்பட்டதை கண்டித்து முசலி பிரதேச செயலக பணியாளர்கள் எதிர்ப்பு
Reviewed by NEWMANNAR
on
December 10, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 10, 2013
Rating:





No comments:
Post a Comment