அண்மைய செய்திகள்

recent
-

வட மாகாண சபையில் முஸ்லிம்களின் பிரச்சினை குறித்து விவாதம்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான காரசாரமான விவாதகங்கள் , வட மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்றன . 

 வடமாகாண சபையில் நேற்று நடைபெற்ற வரவு - செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதங்களின் தொடர்ச்சி புதன்கிழமை நடைபெற்றது . இதன்போது வட மாகாண சபையின் ஆளுக்கட்சி உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் உரையாற்றுகையில் , '1977 ஆம் ஆண்டிலிருந்து முஸ்லிம் மக்களின் தலைவர்கள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துள்ளனர் . 

 ஆகவே தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் இணைப்பொன்று இருந்து வந்துள்ளது . இதனை எந்தவொரு தடையுமின்றி தொடர்ந்து பேணுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் ' என்றார் .

 இதனைத் தொடர்ந்து வட மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் அபாஸ் அப்துல் ரிஸ்வான் , ' வடக்கில் முஸ்லிம் மக்களின் மீள்குடியமர்வு எப்போது என கேள்வி எழுப்பியதுடன் தமக்கு ஏற்பட்ட அநீதிகளையும் முன்வைத்தார் . இருப்பினும் அவரது அக்குற்றச்சாட்டுக்களை பாலச்சந்திரன் கஜதீபன் மறுத்தார் .
வட மாகாண சபையில் முஸ்லிம்களின் பிரச்சினை குறித்து விவாதம். Reviewed by Admin on December 12, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.