பனிச்சங்குளம் பஸ் விபத்து; நால்வர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதி
முல்லைத்தீவு, மாங்குளம் – பனிச்சங்குளம் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்தவர்களில் நால்வர் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மேலும் 10 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும், 10 பேர் சிகிச்சைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
A9 வீதியில் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்சொன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாது நேற்று மாலை விபத்துக்குள்ளானது.
விபத்து தொடர்பில் பஸ்சின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பனிச்சங்குளம் பஸ் விபத்து; நால்வர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதி
Reviewed by NEWMANNAR
on
December 10, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 10, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment