அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் கடந்த கால உண்மைகள் வெளிவரும் போதே நல்லிணக்கம் ஏற்படும்

கடந்த காலங்களில் இடம்பெற்றவை தொடர்பில் உண்மை வெளிவரும் போதே இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படும் என்று பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளார். 

கடந்த 26 வருடக்காலமாக இலங்கையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்திழப்புகள் குறித்த கணக்கெடுப்பை இலங்கை அரசாங்கம் மேற்கொள்கின்றமை தொடர்பிலேயே சர்மா இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் யாவும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அமுலாக்கலுக்கு முன்னோடியாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்தநிலையில் போர்க்கால இழப்புக்கள் குறித்த கணக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் அது பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்றும் கமலேஸ் சர்மா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 


இலங்கையில் கடந்த கால உண்மைகள் வெளிவரும் போதே நல்லிணக்கம் ஏற்படும் Reviewed by Author on December 03, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.