அண்மைய செய்திகள்

recent
-

லண்டனில் இருந்து சென்றவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது.

லண்டனில் இருந்து வந்த மாணவர் ஒருவர்  நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

இது பற்றி தெரியவருவதாவது,

 லண்டனில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த மன்னாரை சேர்ந்த மாணவர் ஒருவர் நேற்று சந்தேகத்தின் பேரில்  குற்றப்புலனாய்வுப்  பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


லண்டனில் வசித்து வரும் மன்னார் பெரியகமம் பகுதியைச் சேர்ந்த அமிர்தநாயகம் நிசாந்தன் டயஸ்  என்ற 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று மாலை மன்னாரில் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது .இவர் நேற்று முன்தினம் புதன்கிழமை லண்டனில் இருந்து   வதிவிடமான மன்னாருக்கு வந்திருந்தார் .

சம்பவ தினத்தன்று வான் ஒன்றில் வந்த மூவர் திடீரென்று வீட்டிற்குள் புகுந்து இவரை விசாரணை செய்ய வேண்டும் எனக்கூறி பலவந்தமாக பிடித்து இழுத்து சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த அயலவர்கள் தெரிவித்தனர்.எனினும் இவரது கைதுக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

மன்னார் நகர நிருபர் 

லண்டனில் இருந்து சென்றவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது. Reviewed by NEWMANNAR on January 18, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.