மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்ஸிம் கிராமத்தில் இந்திய வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில்ஒழுங்கீனங்கள் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிப்பு .
மன்னார் பிரதேசச் செயலக பிரிவுக்குட்பட்ட எருக்கலம்பிட்டி முஸ்ஸிம் கிராமத்தில் இந்தியவீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் பாரிய ஒழுங்கீனங்கள் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர் .
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில் , , , , , ,
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட எருக்கலம் பிட்டி கிராமம் 5 கிராம அலுவலகர் பிரிவுகளைக்கொண்டுள்ளது .
மேலும் கடந்த யுத்த காலத்தில் எருக்கலம் பிட்டியில் வசித்து வந்த முஸ்ஸிம் குடும்பங்கள் இடம் பெயர்ந்து நாட்டின் தென் பகுதி மாவட்டங்களில் வசித்து வந்த நிலையில் தற்போது அவர்கள் மீண்டும் எருக்கலம் பிட்டியில் தமது பூர்விக இடங்களில் மீளக்குடியமர்ந்து தமது பகுதியில் நிரந்தரமாக வசித்து வரும் நிலையில் இந்திய வீட்டுத்திட்டத்தில் அவர்கள் உள்வாங்கப்படாது தொடர்ந்தும் வெளி மாவட்டங்களில் வசித்து வரும் குடும்பங்கள் குறித்த இந்திய வீட்டுததிட்ட பயனாளிகள் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளதாக பாதீக்கப்பட்டவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர் .
மேலும் இந்திய வீட்டுத்திட்டத்தை அமுல் படுத்தி வரும் இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தினர் வீட்டுத்திட்டத்திற்கு பயனாளிகளை தெரிவு செய்வதற்காக எருக்கலம் பிட்டிக்கு வந்த பல சந்தர்ப்பங்களிலும் அவர்களினால் தயார் படுத்தப்பட்ட பயனாளிகள் பட்டியலில் எருக்கலம்பிட்டி கிராமத்தில் நிரந்தரமாக வசிக்காத புத்தளம் , கல்பிட்டி , கொழும்பு , கம்பஹா பகுதிகளில் நிரந்தரமாக வசிக்கும் பெரும் எண்ணிக்கையான நபர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் , இவர்களை பட்டியலில் இணைத்துக்கொள்வதற்கு பிழையான தரவுகள் , நம்பகத்தன்மையற்ற ஆவனங்கள் இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .
- மேலும் தற்பொழுது எருக்கலம் பிட்டி கிராமத்தில் வசிக்கும் பண வசதி படைத்த , அரசியல் செல்வாக்கு உடைய பலர் எருக்கலம் பிட்டியில் நிரந்தரமாக வசிக்காத தமது நெருங்கிய உறவினர்களின் பெயர்களை குறித்த பயனாளிகள் பட்டியலில் இடம் பெறச் செய்துள்ளதாகவும் , அவ்வப்பொழுது இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தினர் எருக்கலம் பிட்டிக்கு வருகை தரும் சந்தர்ப்பங்களில் முறையற்ற விதத்தில் அவர்களை அனுகி தமது நெருங்கிய உறவினர்களின் பெயர்களை குறித்த வீட்டுத்திட்ட பயனாளிகளின் பட்டியலில் இடம்பெயரச் செய்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .
- மேலும் குறித்த இந்திய வீட்டுத்திட்டத்தின் முதற்கட்ட பயனாளிகளின் பட்டியலை கடந்த 11 ஆம் திகதி இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தினர் வெளியிட்டுள்ளதாகவும் , அப்பட்டியலில் பெரும் செல்வந்தர்கள் , தொழில் அதிபர்கள் , கொழும்பில் பல வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களின் பெயர்கள் அடங்கியுளளதாகவும் பாதீக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர் .
எனவே குறித்த பயனாளிகள் தெரிவு பட்டியல் மீள் பரிசிலினை செய்யப்பட்டு உண்மையில் பாதிக்கப்பட்ட,அக்கிராமத்தைச்சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்ஸிம் கிராமத்தில் இந்திய வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில்ஒழுங்கீனங்கள் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிப்பு .
Reviewed by NEWMANNAR
on
January 19, 2014
Rating:

No comments:
Post a Comment