அண்மைய செய்திகள்

recent
-

கைது செய்தேனும் மன்னார், யாழ். ஆயர்களை விசாரிக்க வேண்டும்

மன்னார் ஆயர் இரா­யப்பு ஜோசப் மற்றும் யாழ். ஆயர் தோமஸ் சௌந்­தரநாயகம் ஆகி­யோரை கைது செய்­தேனும் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்தி சட்­டத்தை அமுல் செய்­யு­மாறு கோரி ராவணா சக்தி அமை ப்பு பொலிஸ் மா அதி­ப­ருக்கு கடிதம் ஒன்றை கைய­ளித்­துள்­ளது.நேற்று முற்­பகல் வேளையில் பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு சென்ற ராவணா சக்தி அமைப்பின் தேசிய அமைப்­பாளர் இத்­தே­கந்த சத்தா திஸ்ஸ தேரர் தலை­மை­யி­லான குழு­வி­னரே இந்த கடிதத்தை கைய­ளித்­துள்­ளனர்.

பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு குறித்த தேரர் குழு­வினர் சென்ற போது பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­ககோன் அங்கு இல்­லாத நிலையில் அந்த கடி­த­மா­னது பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் விக்­ர­ம­சே­கர ஊடாக அவ­ருக்கு கைய­ளிக்­கப்­ப­டு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை அந்த அமைப்பு மேற்­கொண்­டது. குறித்த கடி­தத்தை பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் விக்­ர­ம­சே­க­ர­விடம் கைய­ளித்த ராவணா சக்தி அமைப்பின் தேசிய அமைப்­பாளர் சத்­தா­திஸ்ஸ தேரர் அது தொடர்பில் உடன் விசா­ர­ணை­யொன்றை ஆரம்­பிக்­கு­மாறு கோரினார்.

மன்னார் ஆயர் இரா­யப்பு ஜோசப் மற்றும் யாழ் ஆயர் தோமஸ் சௌந்­த­ர­நா­யகம் ஆகி­யோரை விஷேட விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­து­மாறு கோரும் அந்த கடி­தத்தில் அவர்­களை கைது செய்­தேனும் அந்த நட­வ­டிக்­கை­யினை மேற்­கொள்­ளு­மாறும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

குறித்த இரு ஆயர்­களும் இலங்கை இரா­ணுவம் குறித்து வெளி­யிட்­டுள்ள கருத்­துக்கள் தொடர்­பி­லேயே அவர்­க­ளிடம் விசா­ர­ணையை மேற்­கொள்­ளு­மாறு அந்த அமைப்பு கோரி­யுள்­ளது.

கடந்த வாரம் இலங்­கைக்கு வருகை தந்த யுத்த குற்­றங்கள் தொடர்­பி­லான அமெ­ரிக்­காவின் தூதுவர் ஸ்டீவன் ஜே.ரெப்­பிடம் குறித்த இரு ஆயர்­களும் உண்­மைக்கு புறம்­பான விட­யங்­களை தெரி­வித்­துள்­ள­தா­கவும் அது தொடர்பில் சட்டம் அமுல் செய்­யப்­ப­ட­வேண்டும் எனவும் அந்த அமைப்பின் கடிதத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹ­ணவை தொடர்­பு­கொண்டு கேசரி வின­வி­யது. இதன் போது கருத்து தெரி­வித்த பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண, குறித்த கடிதம் பொலிஸ் மா அதி­பரின் கைக­ளுக்கு கிடைத்­துள்­ளதை உறு­திப்­ப­டுத்­தி­ய­துடன் அது தொடர்பில் விசா­ரணை செய்­வதா? இல்­லையா? என்­பது குறித்து ஆராய்ந்­து­வ­ரு­வ­தா­கவும் குறிப்­பிட்டார். எவ்வாறாயினும் ராவணா சக்தி அமைப்பின் குறித்த கோரிக்கை அடங்கிய கடிதம் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் இன்னும் ஒரு தீர்மானத்தை நேற்று மாலை வரை எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்தேனும் மன்னார், யாழ். ஆயர்களை விசாரிக்க வேண்டும் Reviewed by NEWMANNAR on January 17, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.