அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மனித புதைகுழி: இன்று ஒரு எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதைகுழி இன்று வியாழக்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் முன்னிலையில் 12வது தடவையாக தோண்டப்பட்ட போது மேலும் ஒரு மனித எலும்புக்கூடு உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 மன்னார் நீதவான் மற்றும் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரட்ண ஆகியோர் முன்னிலையில் குறித்த புதை குழி இன்று காலை 8.30 மணிமுதல் மாலை 2.30 மணிவரை தோண்டப்பட்டது. 

மேலும் குறித்த மனித புதை குழியில் உள்ள மனித எலும்புக்கூடுகள் சில அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரட்ண மற்றும் அவரது குழுவினரால் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு கொண்டு செல்வதற்காக பொதி செய்யப்பட்டுள்ளது.

 நேற்று புதன்கிழமை குறித்த புதைகுழியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டின் பாகங்கள் பரிசோதனைகளுக்காக 4 பெட்டிகளில் பொதி செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இன்று வியாழக்கிழமை வரை மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் தொகை 44 ஆக உயர்வடைந்துள்ளது.
மன்னார் மனித புதைகுழி: இன்று ஒரு எலும்புக்கூடு கண்டுபிடிப்பு Reviewed by NEWMANNAR on January 23, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.