அண்மைய செய்திகள்

recent
-

திருக்கேதிஸ்வரம் மனித புதைகுழியில் மேலும் 8 மனித மனிதஎச்சங்கள் மீட்ப்பு –படங்கள்

மன்னார்இதிருக்கேதீஸ்வரம் மாந்தை சந்தியிலிருந்து சுமார் 70 மீற்றர் தொலைவில் உள்ளமனித புதை குழியில் இருந்து மனிதஎச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இ.ப்பகுதியில் நடத்தப்பட்டமனித எச்சங்களை தேடி கண்டறியும் பணியின் போது நேற்று திங்கட்கிழமை வரை 26 மனிதஎச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன என   தெரிவிக்கப்படுகிறது

நேற்று திங்கட்கிழமை மேலும்   08 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  குறித்த பகுதியில் இருந்து கடந்த மாதம்  20ஆம் திகதியில் இருந்து கடந்த 4 ஆம் திகதி சனிக்கிழமை வரைக்கும் மனித எலும்பு கூடுகள் 18 உம்இ மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைய சட்ட வைத்திய நிபுணர் டி.எல் .வைத்திய ரெட்ண ஆகியோர் முன்னிலையில் மனித புதை குழி தோண்டும் நடவடிக்கை நேற்று இடம் பெற்றது.

இதன் போது புதிதாக 8 மனித எச்சங்கள்  நேற்று மீட்கப்பட்டுள்ளது  என தெரியவருகிறது இவற்றில்  ஆறு வயது மதிக்கத்தக்க ஒருவரின்  எலும்புக்கூடும்   மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த மனித புதைகுழி தோண்டும் பணி மீண்டும்  இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















திருக்கேதிஸ்வரம் மனித புதைகுழியில் மேலும் 8 மனித மனிதஎச்சங்கள் மீட்ப்பு –படங்கள் Reviewed by Author on January 07, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.