அண்மைய செய்திகள்

recent
-

இந்திய மீனவர்கள் 10 பேர் மன்னாரில் கைது -படங்கள்

இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமான முறையில் அத்து மீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டு வந்த இந்திய மீனவர்கள் 10 பேர் நேற்று மாலை இலங்கை கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்

நேற்று மாலை மன்னார் தாழ்வுபாடு கடற்பரப்பில்வைத்து இலங்கை கடற்படையினரால் குறித்த 10 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டு அன்று இரவு 10:30 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்றொழில் பிரதிபணிப்பாளர் பி.எஸ்.மிராண்டா உள்ளிட்ட கடற்றொழில் அதிகாரிகளிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடற்றொழில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 10 பேரையும் பாதுகாப்புகருதி மன்னார் பொலி;ஸ் நிலையத்தில் நேற்று இரவு12:30 மணியளவில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று காலை மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்ட மன்னார் மாவட்ட கடற்றொழில் அதிகாரிகள் குறித்த மீனவர்களின் வாய்மூல முறைப்பாடுகளை பதிவுசெய்த பின் மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

குறித்த மீனவர்கள் தமிழ்நாடு இராமணாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணைகளின்படி தெரியவந்துள்ளதோடு குறித்த 10 மீனவர்களில்; ஒருவர் ஏற்கனவே கடந்த வருடம் 7ம் மாதம் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.












இந்திய மீனவர்கள் 10 பேர் மன்னாரில் கைது -படங்கள் Reviewed by Author on January 03, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.